முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., அமைச்சரை சந்திக்க வாய்ப்பே இல்லை: ராஜ்நாத்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.1 - சார்க் நாடுகளின் மாநாட்டின்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சருடன், ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பே இல்லை என்று உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளையும் வன்முறையையும் கைவிடாமல் இரு நாடுகளுக்கு நடுவே பேச்சுவார்த்தை ஏற்பட வாய்ப்பே இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 18 மற்றும் 19- ந் தேதிகளில் சார்க் நாடுகளின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். அப்போது, அவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தலாம் என செய்திகள் வெளியாகிய நிலையில், உள்துறை அமைச்சகம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்