முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை: இந்தியர் மீது வழக்கு

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப் 12 - அமெரிக்க விமானத்தில் தூங்கி கொண்டிருந்த பெண் பயணியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட 62 வயது இந்தியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூசியானாவில் வசிப்பவர் தேவேந்தர் சிங். 62 வயது இந்தியரான இவர் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் சென்றார். அவரது இருக்கைக்கு அருகே அமெரிக்காவை சேர்ந்த பெண் பயணி ஒருவர் அமர்ந்து பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறக்க தொடங்கியதும் பெண் பயணி அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது தேவேந்தர் சிங் அந்த பெண்ணின் முகத்தோடு முகம் உரசி முத்தம் கொடுத்தார். தொடர்ந்து பெண்ணிடம் செக்ஸ் தொல்லை கொடுத்தார். உடனே திடுக்கிட்டு எழுந்த பெண் பயணி கூச்சலிட்டார். இது பற்றி விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். விமானம் தரையிறங்கியதும் தேவேந்தர்சிங் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. ஒன்றரை கோடி அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்