முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை கற்பழிப்பு புகார்: சதானந்த கவுடா மகன் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், செப் 13:

நடிகை கற்பழிப்பு புகார் வழக்கில் சதானந்த கவுடா மகன் போலீசில் நேற்று ஆஜரானார்.

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது நடிகை மைத்திரி கற்பழிப்பு மற்றும் திருமண மோசடி புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கார்த்திக் கவுடாவுக்குன பெங்களூர் செசன்ஸ் கோர்ட் கடந்த திங்கட் கிழமை ஜாமீன் வழங்கியது. அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மாதந்தோறும் 15,30ம் தேதிகளில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்து இருந்தது. வழக்கு முடியும் வரை கார்த்திக் கவுடாவின் பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து கார்த்திக் கவுடா நேற்று பெங்களூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் பெறப்படும் என்று தெரிகிறது. அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் கவுடாவுக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமண நி்ச்சயதார்த்தம் நடந்தது. நடிகை புகாரால் கார்த்திக் கவுடாவின் திருமணம் முடிவு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்