முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங் குன்றத்தில் ரயிலை கவிழ்க்க சதி?

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், செப் 13:

திருப்பரங்குன்றத்தில் ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்ததால் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணியளவில் பசுமலை பராக்கா நகர் பகுதியில் தண்டவாளத்தை அந்த ரயில் கடக்கும் போது திடீரென ஒரு மாதிரியாக சப்தம் கேட்டதுன. ஆனாலும் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை ஓட்டி திருப்பரங்குன்றத்தில் நிறுத்தினார். அங்கு ரயில்வே அதிகாரியிடம் பசுமலை பராக்கா நகர் பகுதியில் ரயில் வரும் போது ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது, என்னவென்று தெரியவில்லை. பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டார். ரயில்வே அதிகாரி உடனே மதுரை ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது அந்த பகுதி தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்தன. அதனை அப்புறப்படுத்தி விசாரணையை தொடங்கினர். ரயிலை கவிழ்க்கும் சதி நோக்கத்தில் இந்த மாதிரி இரும்பு கம்பிகளை தண்டவாளத்தில் யாரும் போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பசுமலை பகுதியில் நடந்துவரும் கட்டிட பணிக்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி செல்லும் போது தண்டவாளத்தில் சிதற விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இரும்பு கம்பிகளை திருடிய ஆசாமிகள் யார்? தண்டவாளத்தில் தானாக அவைகள் விழுந்ததா? அல்லது வேண்டுமென்றே போட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்