முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஷன் ஷோவில் மதவாசகம்: சல்மான்கான் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

மும்பை, செப் 13:

பேஷன் ஷோவில் மதவாசகம் இடம் பெற்ற புகாரில் நடிகர் சல்மான்கான் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சல்மான்கானுக்கு சொந்தமான தொண்டு நிறுவனம் சார்பில் மும்பையில் பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாடல்கள் அரபிக் மொழியில் மத சம்பந்தப்பட்ட வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்டுகள் அணிந்து போஸ் கொடுத்து ஸ்டைலாக நடந்து வந்தனர். இதை பார்த்த முகம்மத் அசிம், முகம்மத் ஆரிப் என்ற பிரமுகர் சல்மான்கான் மீது போலீசில் புகார் செய்தார். அதில்  மதவாசகம் எழுதப்பட்ட டிஷர்ட்டுகளை மாடல்கள் அணிந்திருப்பது மத கோட்பாடுகளுக்கு எதிரானது. எங்களை காயப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து மும்பை போலீசார் நடிகர் சல்மான்கான் மீது வழக்கு பதிவு செய்தனர். இது பற்றி விசாரணை நடப்பதாக விசாரணை அதிகாரி திலீப் சவான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்