முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் பாஜ - சிவசேனா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப் 14 - மராட்டிய மாநில சட்டசபைக்கு அடுத்த மதாம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ம் தேதி தெரியவரும்.

288 இடங்களை கொண்ட மராட்டிய மாநிலத்தில் தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க பாஜ, சிவசேனா கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மராட்டியத்தில் மொத்தம் 8.2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை கவரும் வகையில் இப்போது பாஜகவினரும், காங்கிரசாரும் போட்டி போட்டு கொண்டு பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் முதல் மாநில சட்டசபை தேர்தல் மராட்டிய, அரியானா மாநிலங்களுக்குத்தான் நடத்தப்படுகிறது. எனவே மோடி திட்டங்கள் மீது மக்கள் திருப்தியுடன் உள்ளார்களா? மோடி அலை இன்னமும் உள்ளதா என்பன போன்றவற்றுக்கு விடை தரும் தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அலை வீசுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஏ.பி.பி. நியூஸ், நீச்சன் நிறுவனம் இணைந்து மராட்டிய மாநிலத்தில் உள்ள 72 தொகுதிகளில் 12,973 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 200 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 30 இடங்களே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கருத்து கணிப்பில் பங்கேற்று பதில் சொன்னவர்களில் 62 சதவீதம் பேர் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியே வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என்று கருத்து பரவியுள்ளது.

இந்த தேர்தலில் சிறு கட்சிகள், சுயேட்சைகள் 21 இடங்களிலும், எம்.என்.எஸ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி மீது பெரும்பாலான மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஊழலை கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தவறி விட்டதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago