முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதியின்றி தங்கியிருந்த 3 நைஜீரியன் வெளியேற்றம்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.14 - ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவைச் சேர்ந்த பலர் கல்வி, வேலை அல்லது சுற்றுலா விசா பெற்று இந்தியாவுக்கு வருகின்றனர்.

இங்கு வந்த பின்னர் ஆன்லைன் மோசடி, போதைப்பொருள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு நமது நாட்டினரையே ஏமாற்றி, ஏராளமான பணம் சம்பாதிக்கும் இவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் கள்ளத்தனமாக இங்கேயே இருந்து வருகின்றனர்.

இதைப்போன்று, உரிய அனுமதி ஆவணங்கள் இல்லாமல் திருப்பூர் மாவட்டத்தில் தங்கியிருந்து, அங்கு பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டுவந்த 3 நைஜீரிய வாலிபர்களை கைது செய்த தமிழக போலீசார், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தனர்.

தமிழக அரசின் உத்தரவையடுத்து, நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக நைஜீரியாவுக்கு செல்லும் விமானத்தில் அவர்கள் மூவரும் ஏற்றி அனுப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்