முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிமுக மாநாட்டு ஏற்பாடுகளை வைகோ பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.15 - பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்த நாளையொட்டி பூந்தமல்லியில் ம.தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) திறந்த வெளி மாநாடு நடக்கிறது.

இதற்காக நசரத் பேட்டையில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. மாநாட்டுக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.

மாநாடு பணிகளை வைகோ நேற்று இரவு நேரில் பார்வையிட்டார். ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆண்டு தோறும் அண்ணா பிறந்தநாள் ம.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அண்ணாவின் 106–வது பிறந்த நாளில் பூந்தமல்லியில் மாநாடு நடைபெறுகிறது.

1959–ம் ஆண்டு செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் அண்ணா தலைமையில் பூந்தமல்லியில் நடைபெற்றது. 55 ஆண்டுகளுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் மீண்டும் பூந்தமல்லியில் நடை பெறுகிறது. தமிழகத்தில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை செப்டம்பர் 15–ந்தேதி தீர்மானிப்போம்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்