முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுத பூஜை: நெல்லை - கோவைக்கு சிறப்பு ரயில்கள்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.15 - ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை- திருநெல்வேலி, சென்னை கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி- சென்னை எழும்பூர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் செப்டம்பர் 30, அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை எழும்பூர்- திருநெல் வேலி சிறப்பு ரயில் அக்டோபர் 5-ம் தேதி இரவு 8.20 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மற்றொரு சிறப்பு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அக்டோபர் 7-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

கோவையில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் அன்று காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தை சென்றடையும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று மாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. மற்றொரு சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 5.10 மணிக்கு கோவையை சென்றடையும். இதற்கான முன் பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங் குகிறது. கோவையில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வே யின் செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago