முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், செப் 16 - ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் வலைகளை வெட்டி கடலில் எரிந்து மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 618 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு, தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது 2 பெரிய கப்பல்களிலும் மற்றும் 8 சிறிய கப்பல்களிலும் இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அங்கு ராமேஸ்வரம் மீனவர்கள்் கடலில் விரித்திருந்த வலைகளை வெட்டி, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன் மீனவர்களையும் விரட்டியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் உயிருக்கு பயந்தபடி மீன்பிடி வலைகளை கடலிலேயே போட்டு விட்டு படகுகளை வேகமாக ஓட்டி தப்பி உள்ளனர். அப்போது தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த லெவில்தாஸ் மற்றும் ஜோசப் ஆகியோரின் படகுகள் மோதிக் கொண்டன. இதில் லெவில்தாஸ் படகு சேதமடைந்தது. அப்பகுதியில் இருந்து இலங்கை கடற்படையினர் சென்ற பின் வெட்டி விட்ட வலைகளை எடுத்து கொண்டு கரைக்கு மீனவர்கள் திரும்பினர். குறைந்த அளவு மீன்களோடு பல லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் வந்ததாக நேற்று முன்தினம் காலை ராமேஸ்வரம் வந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்