முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சார்பில் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17– தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக வாரமிரு வெளிவரும் பத்திரிகை மீது முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாரமிரு முறை வெளி வரும் பத்திரிகையின் செப்டம்பர் 17-ஆம் தேதியிட்ட இதழில் முதல்வர் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், அச்சிட்டாளர் ஆகியோர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சார்பில், மாநகர அரசு வழக்குரைஞர் ஜெகன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்