எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, செப்.17 - 9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.
மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் வதோதரா மக்களவை தொகுதி, மணிநகர் சட்டப்பேரவை தொகுதி, மேற்குவங்கத்தின் பசிராத் தக்ஷின் சட்டப்பேரவை தொகுதிகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் பரவலாக தோல்வியை தழுவியுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அம்மாநில பாஜக தலைவர் அசோக் பர்னமி கூறும்போது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். கட்சித் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து செயல்படுவோம்" என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே முதல்வர் வசுந்தரா ராஜேவை சந்தித்த மாநில பாஜக தலைவர் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் பசிராத் தக்ஷின், சவுரிங்கீ ஆகிய 2 சட்டபேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில், பாஜக வேட்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா பசிராத் தக்ஷின் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சவுரிங்கீ தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசைன் கூறியதாவது: சில இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. முடிவுகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மக்கள் உள்ளூர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அதே வேளையில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது மிகவும் நல்ல செய்தி. இடைத்தேர்தல் முடிவுகளை தேசிய மற்றும் மாநில அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது என்றார்.
குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 6 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மக்களவை தொகுதி என மொத்தம் 7 இடங்களிலும் காங்கிரஸ் 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக குஜராத்தின் 26 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீசா, மங்ரோல், கம்பாலியா ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது.
இருப்பினும், குஜராத் மாநிலம் வதோதரா மக்களவை தொகுதியில் பாஜக 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திகல் வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி, வதோதரா தொகுதிகளில் வதோதரா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ராவத்தைவிட 3,29,507 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவந்திகா சிங் அறிவித்தார்.
தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் வேட்பாளர் கே.பிரபாகர் ரெட்டி 3,61,277 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தெலங்கானா முதல்வரானதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி, 4 இடங்களில் முன்னிலை என சமாஜ்வாதி கட்சியின் கை ஓங்கியுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்: "மக்களவை தேர்தலில் மதவாத சக்திகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் உண்மை நிலை உணர்ந்துள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர்" என்றார்.
அசாமின் லக்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்தீப் கோலா, பாஜக வேட்பாளரை 9172 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ராஜ்தீப் கோலா பெற்ற மொத்த வாக்குகள் 40,090 ஆகும். மொத்தம் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
சிக்கிம் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றார். இம்மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. களத்தில் பாஜக, காங்கிரஸ், சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளும் இருந்தன. இம்மூன்று கட்சி வேட்பாளர்களையும் வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றுள்ளார்.
திரிபுராவில் நடந்த ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரவத் சவுத்ரி வெற்றி பெற்றார். விவசாயத் துறை முன்னாள் ஊழியரான இவர் 21,759 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பிரித்தாளும் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.