முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடைமொழியை பயன்படுத்த வேண்டாம்: கேரள கவர்னர்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், செப் 18:

தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் கேரள மாநில கவர்னராக சமீபத்தில் பதவியேற்றார். இந்த நிலையில் திருவனந்தபுரம் கவர்னர் மாளிகை சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

தன்னுடனான கடித போக்குவரத்து உட்பட அனைத்து தொடர்புகளின் போதும் மதிப்புக்குரிய கேரள கவர்னர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தினால் போதும். மேதகு என்பது உட்பட வேறு எந்தவிதமான அடைமொழியையும் பயன்படுத்தி தன்னை குறிப்பிட வேண்டாம் என்று கவர்னர் விரும்புகிறார். இவ்வாறு அந்த செய்தி குறி்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்