முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் பிறந்தநாள்: அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.18 - தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை, முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அதிமுக தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்..

தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று

சிறப்பாக கொண்டாடப்பட்டது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136-ஆவது பிறந்த நாளான நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக, கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில், கட்சியின் அமைப்புச் செயலாளர் டாக்டர் பாண்டியன், கட்சியன் அமைப்புச் செயலாளரும், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், கட்சியின் அமைப்புச் செயலாளர்களான ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத்,

செ. செம்மலை, விவசாயப் பிரிவுச் செயலாளரும், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவருமான கு. தங்கமுத்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கட்சியின் அமைப்புச் செயலாளரும், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவருமான ஆதிராஜாராம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்,

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளரும், தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவருமான பிரபாகர், எம்எல்ஏ, வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வெங்கடேஷ்பாபு, எம்பி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்