முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் 45% வாக்குகள் பதிவு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 19 – சென்னை மாநகராட்சி, மண்டலம்-4க்குட்பட்ட 35-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இதில் 45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 12696 ஆண்களும், 10615 பெண்களும், ஆக மொத்தம் 23311 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த வார்டிலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 51928. இதில் ஆண்களின் எண்ணிக்கை 25947, பெண்களின் எண்ணிக்கை 25975 மற்றும் மற்றவர்களின்

எண்ணிக்கை 6 ஆகும்.

இந்த 35வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் அனைத்தும் வரும் 22.09.2014 (திங்கட்கிழமை) அன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் மையமான வியாசர்பாடி, ஷர்மா நகர், சென்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்