முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: முதல்வர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, செ ப்.20 - அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:_
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சிக் கழக செயலாளர் டி.பன்னீர்செல்வம், திருவாரூர் நீடாமங்கலம் பேரூராட்சி எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் எம்.செல்வராஜ், சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி பி.வரதராஜன், மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், கல்லணை ஊராட்சிக் கழகச்செயலாளர் ஜி.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர்கள் பன்னீர்செல்வம், செல்வராஜ், வரதராஜன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதேபோல், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவரும், 5_வது வார்டு கழக மேமைப்புப் பிரதிநிதியுமான எம்.வி.தேவதாஸ் முன்விரோத காரணமாக கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், இந்தத் தாக்குதலில் தேவசாசின் மகன் டி.ஜார்ஜ் என்பவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் வருத்தமுற்றேன்.
இந்த தாக்குதலைத் தொடுத்தவர்கள் யாறாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்புச் சகோதேவதாஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜார்ஜ் விரைவில் பூரண நலம் பெற்று ரீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்