முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 20 – திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருவண்ணாமலை நகரம், அண்ணா நுழைவு வாயில் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவல பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை தற்காலிக முகாமில், சிகிச்சை பெற வந்த திருநெல்வேலி நகரம், பாரதி நகரைச் சேர்ந்த . சுவாமிஜி என்பவரின் மகன் அங்கப்பன் 15.5.2014 அன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த . அங்கப்பன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பூர்ணசந்திரன், சிதம்பரத்தைச் சேர்ந்த . ராகுல் பிரசாத் ஆகியோர் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அங்கப்பன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்