முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டலின் சீனிவாஸ் மரணம்: முதல்வர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.20 – பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் கல்லீரல் பிரச்சினை தொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3 ந்தேதி சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று

அவர் மரணமடைந்தார்.மாண்டலின் சீனிவாஸ் மரணமடைந்ததிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த

. மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள் தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

மத்திய அரசின் "பத்மஸ்ரீ"", "சங்கீத ரத்னா"" உள்பட பல விருதுகளைப் பெற்றவர் . மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள். . மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். .

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்