முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 500.00 கோடி மதிப்புள்ள பிணையப் பத்திரங்கள் ஏலம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 – தமிழக அரசின் ரூபாய் 500.00 கோடி மதிப்புள்ள பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது. மொத்தம் ரூபாய் 500.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன்

மும்பை-கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 23, 2014, அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்[Reserve Bank of India Core Banking Solution(E-Kuber) System] மின்னணு படிவத்தில் ((Electronic format) செப்டம்பர் 23, 2014 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நிதித் துறை முதன்மைச் செயலாளர், அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்