எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்சியான், செப்.20 - 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று தொடங்கியது. 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம் தேதி நிறைவடைகிறது.
இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது. ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள். 36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ள ன. இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுகின்றன.
மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும். இதுதவிர வீரர்களின் பயிற்சிக்காக 54 பயிற்சி மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு கிராமத்தில் வீரர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக 9,500 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்சியானில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மைதானத்தில் 61 ஆயிரத்து 74 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் தொடக்க விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. முதல் நாளில் எந்தப் போட்டியும் கிடையாது. இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக உத்தேசமாக ரூ.9870 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் அசைக்க முடியாத அணியாக சீனா திகழ்கிறது. ஆசிய விளையாட்டின் வரலாற்றில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து அதிக பதக்கங்கள் வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனா இதுவரை 1,191 தங்கம், 792 வெள்ளி, 570 வெண்கலம் என மொத்தம் 2,553 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் 2,650 பதக்கங்களுடனும், தென் கொயா 1,829 பதக்கங்களுடனும் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. கடந்த முறை 199 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்த சீனா இந்த முறையும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது இடத்தை ஜப்பானும், 3-வது இடத்தையும் தென் கொரியாவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதல் 7 இடங்களுக்குள் வரலாம் என தெரிகிறது.
இந்தியாவில் இருந்து 679 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 516 பேர் வீரர், வீராங்கனைகள். எஞ்சியவர்கள் பயிற்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆவர். நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, படகுப் போட்டி, சைக்கிளிங், குதி ரையேற்றம், கால்பந்து, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வாலிபால், மல்யுத்தம், ஊஷூ, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம் உள்பட 64 பதக்கங்களைக் குவித்த இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது. ஆசிய கண்டத்தில் விளையாட்டுத் துறையில் கோலோச்சி வரும் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. கடந்த முறையைவிட இந்த முறை இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லும் என இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) நம்பிக்கை தெரிவித்துள்ளது. "காமன்வெல்த் போட்டியில் 64 பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியாவின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்கள் வரை இந்தியர்கள் வெல்வார்கள் என நம்புகிறோம்" என சாய் இயக்குநர் ஜி.ஜி.தாம்சன் தெரிவித்துள்ளார்.
பாட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் சில பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குத்துச்சண்டை, மல்யுத்தம், கபடி ஆகியவற்றில் இந்த முறையும் இந்தியர்கள் பதக்கங்களைக் குவிப்பார்கள் என நம்பப்படுகிறது. கபடியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் அணி, இந்த முறையும் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மகளிர் அணிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. இதுதவிர டென்னிஸிலும் பதக்க வாய்ப்புள்ளது.
ஹாக்கி போட்டியைப் பொறுத்தவரையில் 1988-க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லவில்லை. இந்தமுறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் உள்ளது சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி. தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுவிடலாம்.
ஆடவர் வட்டு எறிதலில் விகாஸ் கௌடாவுக்கு பதக்க வாய்ப்புள்ளது. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌடா, இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதில்லை. எனவே அவர் இந்த முறை அந்த குறையைத் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் வட்டு எறிதலில் கிருஷ்ணா பூனியா, சீமா பூனியா ஆகியோருக்கு நல்ல வாய்ப்புள்ளது. இவர்களில் சீமா பூனியா, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் சித்தார்த் திங்காளயா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. அவர் கடந்த மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரையில் அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் கடந்த முறை நழுவவிட்ட தங்கப் பதக்கத்தை இந்த முறை வெல்லும் முனைப்பில் உள்ளனர். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் ஆகியவற்றில் பதக்கம் வென்றுவிட்ட பிந்த்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டி யில் தனிநபர் பிரிவில் ஒரு பதக்கம்கூட வென்றதில்லை. அவ ருக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியாக இருக்கலாம் என்பதால் அவர் தங்கம் வெல்ல முயற்சிப்பார்.
ஜிது ராய் (50 மீ. பிஸ்டல்), அபூர்வி சான்டீலா (மகளிர் 10 மீ. ஏர் ரைபிள்), மலாய்கா கோயல், அயோனிகா பால் போன்ற புதுமுகங்களும் துப்பாக்கி சுடுதலில் கலக்கக் காத்திருக்கின்றனர். இவர்களில் ஜிதுராய் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதோடு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார்.
மல்யுத்தத்தைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற சுஷீல் குமார் பங்கேற்கவில்லை. இதனால் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்துக்காக காத்திருக்கும் இந்தியாவின் 28 ஆண்டுகால காத்திருப்பை யோகேஷ்வர் தத் முடிவுக்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே உள்ளது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக "பன்மயம் ஒளிர்கிறது இங்கே" என்ற வார்த்தை இடம்பெற்று ள்ளது.
ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது. போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல் நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டு ள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என அழைக்கப்படுகி ன்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ, விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட சின்னத்தை தேர்வு செய்தனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.