முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருட்டு சி.டி. வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப். 21 – சென்னையில் புதிய தமிழ் படங்களின் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை ஒழிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் திருட்டு சி.டி. வியாபாரிகளை மத்திய குற்றப்பிரிவு மற்றும் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவினர் கைது செய்து வருகிறார்கள்.

திருட்டு டி.வி.டி. விற்ற முக்கிய வியாபாரியான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

கொருக்குப்பேட்டை காரநேசன் நகரில் உள்ள அவரது கடையில் இருந்து திருட்டு சி.டி. தயாரிக்க பயன்படுத்திய 2 ரைட்டிங் மிஷின், ஒரு சி.பி.யூ, ஒரு யூ.பி.எஸ்., ஒரு ஸ்டெபிலேசர், ஒரு மானிட்டர், 5 பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன ‘அஞ்சான்’, ‘சலீம்’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘இரும்பு குதிரை’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஜிகர்தண்டா’, ‘மஞ்சப்பை‘, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட தமிழ் பட டி.வி.டி.க்கள், ஆபாச டி.வி.டி.க்கள், ஆங்கில பட டி.வி.டி.க்கள் உள்பட 1,500–க்கும் மேற்பட்ட டி.வி.டி. க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான ஜெய்சங்கரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்