முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டலின் சீனிவாஸ் மறைவு: கவர்னர் இரங்கல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 21 – மாண்டலின் சீனிவாஸ் மரணமடைந்ததிற்கு கவர்னர் ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார் இது குறித்து கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மாண்டலின் சீனிவாசின் திடீர் மறைவை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உலகம் முழுவதும் இந்தியாவுக்கு, மாண்டலின் சீனிவாஸ் புகழ் தேடி தந்தார். மாண்டலின் என்றாலே உடனடியாக சீனிவாஸ் தான் நினைவுக்கு வருவார். சாவின் கோரப்பிடி இளம் வயதிலேயே அவரை பறித்து சென்று இருக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு, குறிப்பாக அவரது ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்