முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் கலப்பட வழக்கில் குற்றவாளி கைது

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, செப். 21 – ‘ஆவின்’ பாலில் தண்ணீரை கலந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் வைத்தியநாதனை போலீசார் தேடி வந்தனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வைத்தியநாதன் தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வைத்தியநாதனை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வைத்தியநாதன் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago