முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 49 துருக்கியர்களை விடுவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

மொசூல், செப்.22 - ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக போரை நடத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 9 ந் தேதி ஈராக்கின் மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர் அப்போது மொசூல் நகரில் இருந்த துருக்கி நாட்டை சேர்ந்த 49 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், சிறைபிடித்து வைத்து இருந்தனர்.

இதில் மொசூல் நகரில் இருந்த துருக்கி தூதர்களும் அவர்களது குடுமபத்தினரும் அடங்குவர். தற்போது துருக்கி நாட்டை சேர்ந்த 49 பேரை தீவிரவாதிகள் விடுவித்து உள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பாக துருக்கி வந்து சேர்ந்ததாக துருக்கி பிரதமர் அஹ்மத் தவ்டோகுலு தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்