எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 23 - தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர்களே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர். நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்று விட்ட நிலையில் கோவை, தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதே போல் கடலூர், விருத்தாச்சலம், அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தடைகளை தாண்டி இந்த இடை தேர்தல் கடந்த 18ம் தேதி அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் களமிறங்கின. மற்ற கட்சிகள் தேர்தலில் பங்கேற்கவில்லை. 3 மேயர் பதவி, 8 நகரசபை தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லையில் அதிமுக மேயர் வேட்பாளராக புவனேஸ்வரியும், தூத்துக்குடி மேயர் வேட்பாளராக அந்தோணி கிரேஸூம், கோவை மேயர் வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கிய வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து விலகி கொண்டதை அடுத்து புவனேஸ்வரி ஒரு மனதாக மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் பாஜகவின் வெள்ளையம்மாள் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து 2 மேயர் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதே போல் நகராட்சி தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பே 1,589 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் தனது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். 14ம் தேதியன்று தூத்துக்குடியில் மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேஸை ஆதரித்து அவர் நகரின் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். மறுநாள் 15ம் தேதியன்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். கோவை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் கோவையின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு செய்த ஒதுக்கீடுகளையும் முதல்வர் பட்டியலிட்டார். இந்த சூழலில் கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் முன்னணியில் இருந்தார்கள். கோவை அதிமுக மேயர் பதவிக்கு போட்டியிட்ட கணபதி ப. ராஜ்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் நந்தகுமாரை விட 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 11வது சுற்று எண்ணிக்கையின் முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை நகராட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கோவை சுகுணாபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட அந்தோணி கிரேஸி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயலெட்சுமியை விட 84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவின் ஜெயலெட்சுமி 31,708 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளரின் வெற்றியை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். மேயர் பதவிகளை கைப்பற்றிய அதிமுக 4 நகராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 8 நகராட்சி தலைவர் பதவிகளில் ஏற்கனவே அதிமுக 4 நகராட்சி தலைவர் பதவிகளை போட்டியின்றியே கைப்பற்றி விட்டது. அவற்றில் புதுக்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகராட்சிகள் அடங்கும். மீதமுள்ள ராமநாதபுரம், கடலூர், விருத்தாச்சலம், அரக்கோணம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடை தேர்தல் நடந்தது. இந்த நான்கையுமே அதிமுக கைப்பற்றி விட்டது.
கடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 57,258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இ. கம்யூனிஸ்டு கட்சியின் மாதவன் வெறும் 6,292 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் செல்வம் வெறும் 4,954 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆக, கடலூரில் அதிமுக வேட்பாளர் குமரன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ராமநாதபுரத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக சந்தானலெட்சுமி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துரை கண்ணனை விட 13,057 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 20,442 ஆகும். பாஜக வேட்பாளர் துரைகண்ணன் 7,385 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற சந்தானலெட்சுமி அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார். இந்த வெற்றியை ராமநாதபுரம் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல் விருத்தாச்சலம் நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அருளழகன், கிட்டத்தட்ட 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரக்கோணம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கண்ணதாசன் கிட்டத்தட்ட 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 2,130 பதவிகளில் 1,589 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 530 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெரும்பாலும் அதிமுகவினரே அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றி முதல்வரின் நலத்திட்டங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று அமைச்சர் கோகுல இந்திரா, பா. வளர்மதி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். பேரூராட்சி தலைவர் பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றி உள்ளது. மடத்துக்குளம் பேரூராட்சியில் பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதே போல் வார்டு உறுப்பினர் பதவிகளையும் அதிமுக கணிசமாக கைப்பற்றி உள்ளது. மதுரையில் 4வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் சண்முகம் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மேயர் ராஜன்செல்லப்பா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். திருப்பூர் 22வது வார்டில் அதிமுக வேட்பாளர் கலைமகள் கோபால்சாமி வெற்றி பெற்றார். ஈரோடு 60வது வார்டில் பாலசுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் 35வது வார்டில் டேவிட் ஞானசேகரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை மேயர் சைதை துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். விழுப்புரத்திலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கனியை தட்டிப் பறித்து சென்றனர். இப்படி தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களே நடந்து முடிந்த இடைதேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளனர். இதையடுத்து வாக்காளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.