முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தலைமை செயலகத்தில் தீ விபத்து

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 23 – சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை 9 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள 6–ம் நம்பர் கேட் முதல் மாடியில் பணியாளர் சீர்திருத்த துறை அலுவலகம் உள்ளது. இங்குள்ள மின் சாதனங்களில் திடீர் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது.

காலை 9 மணி என்பதால் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. அறையில் இருந்து புகை வருவதை கண்ட போலீசார் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தலைமை செயலக தீயணைப்பு வண்டி உள்பட 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன. சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

ஆனாலும் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், கோப்புகள், மேஜை, நாற்காலிகள் எரிந்து நாசமாகி விட்டது.

சேத மதிப்பு பற்றி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

தலைமை செயலகத்தில் தீப்பிடித்த சமயத்தில் ஊழியர்கள் ஒவ்வொருவராக வேலைக்கு வரத் தொடங்கினர். அப்போது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்கள் மாடிக்கு செல்லாமல் கீழே நின்று கொண்டிருந்தனர்.

கோட்டைக்கு வேலைக்கு வந்த ஊழியர்களும் தீ விபத்தை வேடிக்கை பார்க்க திரண்டதால் கூட்டம் அதிகமாகி விட்டது. சுமார் 2 மணி நேரம் கோட்டை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்