முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: வானிலை மையம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 23 – தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட வட மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவும் மழை பெய்தது.திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், அடையார், மயிலாப்பூர் உள்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.விமான நிலையம், கோயம்பேடு பகுதிகளில் ஒரளவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.நேற்று அதிகாலையிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மீனம்பாக்கத்தில் 31.4 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 13.3 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. புதுச்சேரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமாகவும், தென் மாவட்டங்களிலும் லேசான மழையும் எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்