முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி - ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.23 - கன்னியாகுமரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குமரி கலெக்டராக சஜ்ஜன்சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டராக டாக்டர் பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், கவர்னரின் உத்தரவின் பேரில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருக்கும் எஸ்.நாகராஜன் அப்பணியிலிருந்து மாற்றப்பட்டு மின்ஆளுமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுல் ஆனந்துக்கு பதிலாக இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருக்கும் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் அப்பணியிலிருந்து மாற்றப்பட்டு கன்னியாகுமரி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருக்கும் கே.பாஸ்கரன் அப்பணியிலிருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ஈரோடு கலெக்டராக இருக்கும் வி.கே.சண்முகம் காஞ்சிபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் பட்டுப்புழு துறை இயக்குனராக இருக்கும் டாக்டர் பிரபாகரன் ஈரோடு கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் செந்தில் குமார் அப்பணியிலிருந்து மாற்றப்பட்டு சேலம் பட்டுப்புழு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்