எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், செப் 24:
அரபு நாடுகள் உதவியுடன் சிரியாவி்ல் அமெரிக்கா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதில் ஜோர்பான், கத்தார், பாஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் பங்கேற்றுள்ளன.
ஈராக் நாட்டில் உள்நாட்டு போர் தீவரமடைந்து வருகிறது. சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் ஈராக் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக வைத்து அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோரை கொன்றுள்ளனர். அண்டை நாடான சிரியாவிலும் ஐஎஸ்ஐ தீவிரவாத பிரிவு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈராக் மீது சமீப காலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டு வாரங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து வட ஈராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு சொந்தமான ஆயுத கிடங்கு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பிரான்ஸ் நாடும் பங்கெடுத்து கொண்டது. இதன் மூலம் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது. ஐக்கிய அரபு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தருவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையி்ல் சிரியா நாட்டில் உள்ள ரக்கா நகர் மீது நேற்று முன்தினம் அமெரிக்கா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவுக்கு உதவியாக ஜோர்டான், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தாக்குதலில் பங்கேற்றுள்ளன. அப்போது போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு சொந்தமான ஆயுத கிடங்குகள், புகலிடங்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கட்டிடங்கள் மீது குண்டுகள் பொழிந்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் இத்தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதல் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. அதற்கு பின் மேலும் சில மணி நேரங்கள் இடைவெளிக்கு பின் தாக்குதல் நடந்தது. பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து சிரியா அதிபர் ஹரி அல் பஹ்ராவுக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை. சிரியா எல்லையோர பகுதியில் குர்திஷ் இனத்தினர் மீது ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வந்தனர். அதனை தடுத்து நிறுத்த அமெரிக்காவுக்கு சிரியாவின் எதிர்க்கட்சிகள் கூட்டணி சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.