எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், செப் 24 - எல்லை பகுதியில் இருந்து வாபஸ் பெற சீனப்படைகள் மறுத்து விட்டன. இந்த நிலையில் சீனாவின் இறையாண்மையை காக்க பிராந்திய அளவிலான போரை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து இந்திய ராணுவ தளபதி சுகாக் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டார்.
1960களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான யுத்தம் நடைபெறவில்லை என்ற போதிலும் அவ்வப்போது சிறிய அளவில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு லடாக்கில் உள்ள தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்தில் சீனப்படையினர் முகாமிட்டனர். அவர்களை வெளியேற்ற இந்திய தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்திய காப்பரண்களை அகற்றினால்தான் வெளியேற முடியும் என்று சீன தரப்பு நிபந்தனை விதித்தது. இறுதியில் வேறு வழியின்றி காப்பரண்களை இந்தியா அகற்றியது. இதன் பிறகே சீன ராணுவ வீரர்கள் திரும்பி சென்றனர்.
1960களின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் சீன பிரதமர் சூயென்லாயும் நெருக்கமாக இருந்த போதிலும் அருணாசல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தது. இந்நிகழ்வு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. காலவோட்டத்தில் விரிசல் தணிந்து விட்டது என்ற போதிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு திருப்திகரமாக இருக்கிறது என்று கூற முடியாது. காஷ்மீருக்குள் சீன படையினர் ஊடுருவி உள்ளனர். லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் நூற்றுக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவ வீரர்கள் கூறினார்கள். ஆனால் சீன ராணுவ வீரர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களை சுற்றி வளைத்தார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கு திரண்டு சென்றனர். இதன் பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது. லடாக் பகுதியில் சீனப்படை வீரர்கள் அத்துமீறியுள்ளதை சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கவனத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றார். அத்துமீறல் நடைபெற்றிருந்தால் சீனப்படை வீரர்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி ஜின்பிங் உறுதியளித்தார். ஆனால் அதே நேரத்தில் இரு தரப்பாலும் ஏற்பளிக்கப்பட்ட எல்லை நிர்ணயம் செய்யப்படாததுதான் பிரச்சினைக்கு மூல காரணம். எனவே துல்லியமாக எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை இப்பிரச்சினை ஓயாது என்பதையும் ஜி ஜின்பிங் குறிப்பிடத்தவறவில்லை. இந்தியாவுக்குள்ளும் சீனர்கள் சாலை அமைத்து வருகிறார்கள். அதற்கான கட்டுமான பொருட்களையும் இதர தளவாடங்களையும் சீனாவில் இருந்து கொண்டு வருகிறார்கள். லடாக்கில் உள்ள டிபிள் என்ற இடம் சீன எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த இடம் வரை சாலை அமைத்தே தீர வேண்டும் என்பதில் சீனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.
இந்தியாவுக்குட்பட்ட பகுதியில் சீனர்கள் 7 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர். 4 டிரக்குகள், 3 ஜீப்புகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லைக்கு அப்பால் தங்கியுள்ள 500 சீன ராணுவத்தினர் இவர்களுக்கு தேவையானவற்றை அவ்வப்போது அளித்து வருகிறார்கள். உணவு பொட்டலங்களையும் வழங்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் இடம் நடுங்க வைக்கும் குளிர் மிகுந்த பகுதியாகும். அங்கு மைனஸ் 3 டிகிரி சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இம்மாதம் 10ம் தேதி எத்தகைய நிலை காணப்பட்டதோ அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால் சீனா இதை பொருட்படுத்த மறுக்கிறது. சுமரில் 800 சீன ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். சுமர் அருகே 1,800 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 1,05,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் மட்டும் 15,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 படை பிரிவுகளை லடாக் பகுதிக்கு அனுப்ப இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு படைபிரிவில் 800 வீரர்கள் உள்ளனர். 1 5 படை பிரிவுகளில் மொத்தம் 12,000 வீரர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் அசாம் ரைபில்சை சேர்ந்த 40 ஆயிரம் ராணுவ வீரர்களை எல்லை பகுதிக்கு அனுப்பவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இன்று டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்து பேசுவதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செ்யயப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால் எல்லையில் பதட்டம் அதிகரி்த்ததையடுத்து அனுமதியை இந்திய அரசு ரத்து செய்தது. சீன கம்யூனிஸ்டு கட்சிபொதுச் செயலாளராகவும், சீன அதிபராகவும் சீன மைய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் உள்ளார். சீனாவின் இறையாண்மையை நிலைநாட்ட பிராந்திய அளவிலான போரை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு சீனா சற்றும் தயங்காது என்ற தொணியில் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.
சீன ராணுவத்தினர் போரை சந்திக்க ஆயுத்த நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சீன ராணுவத் தளபதி பெங்குய் முன்னிலையில் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தினார். சில அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது. இத்தகவல்களை சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சீர்குலையாதவாறு பார்த்து கொள்ளப்படும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் குவா சுன்யின் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் யுத்த பேச்சு இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியிடம் எல்லை பகுதி நிலவரத்தை ராணுவ தளபதி சுகாக் எடுத்துரைத்தார். ராணுவ தளபதி பதவியை ஏற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள சுகாக் திட்டமிட்டு இருந்தார். ஆனால் எல்லை பகுதியில் போர் மேகம் சூழ்ந்ததை அடுத்து தனது 3 நாள் வெளிநாட்டு பயணத்தை சுகாக் ரத்து செய்து விட்டார். இந்திய படையினரும் சீன படையினரும் காஷ்மீர் எல்லை பகுதியில் 8 முக்கிய நிலைகளில் நேருக்கு நேர் நிற்கிறார்கள். சில இடங்களில் இரு தரப்புக்கும் இடையிலான இடைவெளி 700 மீட்டராக உள்ளது. அதிகபட்ச இடைவெளி 1.5 கி.மீட்டராக உள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பிலும் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.