முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 24 - துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ஒன்றரை கிலோ தங்கம் கடத்தி வந்தவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரை விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து மதுரை வந்த விமான பயணிகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் அனுமதியின்றி ஒன்றரை கிலோ எடை கொண்ட 12 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 33 லட்சம் ஆகும். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது பெயர் அப்துல் வகாப்(40) என்பதும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் யாருக்காக கடத்தி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்