முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கமலநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable


சென்னை, செப் 27 - தினபூமி நாளிதழின் சென்னை பதிப்பின் தலைமை நிருபரும், நமது எம்ஜிஆர் நாளேட்டின் இணை ஆசிரியர் கருணாநிதியின் மகனுமான கமலநாதன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் நாளிதழின் இணை ஆசிரியர் கருணாநிதியின் மகன் கமலநாதன் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அன்பு மகனை இழந்து வாடும் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கமலநாதனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த கமலநாதன் தினபூமி நாளிதழில் துவக்கத்தில் சினிமா நிருபராகவும், பின்னாளில் தலைமை நிருபராகவும் பணியாற்றியவர். அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் மரணமடைந்த கமலநாதனின் உடல் சென்னை மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு தினபூமி நாளிதழின் ஆசிரியரும், உரிமையாளருமான எஸ். மணிமாறன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் சார்பில் அவர்களது உதவியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். திரையுலகம் சார்பில் நடிகர் நெப்போலியன், சரவணன், நடிகை ராதிகா மற்றும் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மற்றும் சக பத்திரிகையாளர்களும் திரளாக சென்று கமலநாதன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.  அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் கமலநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்