முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது மேலாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 27 – எஸ்.ஆர்.இ.எஸ். ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் நேற்று (26–ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ரெயில்வே பொது மேலளார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாக தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

என்.எப்.ஐ.ஆர். பொதுச் செயலாளர் எம்.ராகவையா, எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச் செயலாளர் சூரிய பிரகாசம், நிர்வாகிகள், கே. வேலாயுதம், எம்.சூரிய பிரகாஷ் பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

ரெயில்வே தனியார் மயம், நேரடி அந்நிய முதலீடு, 7–வது ஊதியக் குழுவை 01.01.2014 முதல் அமல்படுத்துதல், இடைக்கால நிவாரணம் ரூ. 5000 வழங்குதல், 100 சதவீத அகவிலைப்படியை சம்பளத்துடன் இணைத்து வழங்குதல், போனஸ் உச்ச வரம்பை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிலாளர்கள் ஆயிரக்காணவர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்