முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 29:

ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

டெல்லியில் ஊடகவியல் சட்டங்கள் குறித்த தேசிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது,

சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் தான் ஊடகங்கள் சரியாக செயல்பட்டால் தான் ஊடகங்கள் சரியாக செயல்படுவதாக கூற முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சியில் ஊ டக சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாது. விமர்சனம் செய்யவும், கண்டனம் தெரிவிக்கவும் அறிவுரை வழங்கவும் ஊடகங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் தங்கள் சொந்த நலனுக்காக பணம் பெற்று செய்திகளை வெளியிடுவது கூடாது. புலனாய்வு செய்தி சேகரிப்பில் கவனமாக செயல்பட வேண்டும். பணம் பெற்று செய்திகளை வெளியிடும் போக்கு ஊ டகங்களை பலவீனப்படுத்தி வருகிறது. எனவே ஊடகங்கள் தங்கள் தவறை திருத்தி கொள்ள வேண்டும். ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை அமைச்சர் என்ற முறையில் எதிர்க்கிறேன் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்