எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,செப்.30 - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியைகண்டித்து மதுரையில் மதுரையில் அதிமுகவினர் மாபெரும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேலமாசிவீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் துவக்கி வைத்தனர். உண்ணாவிரதத்தில் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.இந்திராணி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தலைவர்கள் உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசிக்கொண்டிருந்த போது, அனைத்து பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு தங்களது அறவழி போராட்டத்தில் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது, 10 கோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களிலே நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருபவர் ஜெயலலிதா. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் கடந்த 2 நாட்களாக தமிழ்சமுதாயமே உண்ணவோ, உறங்கவோ முடியாமல் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்து வருகிறார்கள். ஜெயலலிதாவை சிறைசாலைக்கு அனுப்பியதை அனைத்து சட்ட வல்லுனர்களும் எதிர்த்து வருகிறார்கள். இது போன்று தொடுக்கப்பட்ட எத்தனையோ பொய் வழக்குகளை தகர்த்து எறிந்ததை போல் இதையும் ஜெயலலிதா தகர்த்து எறிவார் என்றார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் பேசியதாவது, மதுரை மண்ணில் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நீதி கேட்ட இந்த பூமியில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டஅநீதியை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறோம். அவருக்கு அநீதியை இழைத்து இருப்பது மாபெரும் குற்றமாகும். 5 ரூபாய் கூட வாடகை கொடுக்க முடியாமல் ஓடிஒளிந்த கருணாநிதி இன்றைக்கு உலகிலேயே 5 வது பணக்காரராக உள்ளார். தான் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க நீதியை விலைபேசியவர்தான் கருணாநிதி. அவர் பரம்பரையே தேர்தலில் நிற்ககூடாத அளவிற்கு பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். ஆனால் தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக மக்களை காக்கும் சாமியாக பல்வேறு நீதிகளை பெற்றுத்தந்த ஜெயலலிதா தடைகளை தகர்த்து எறிந்து மீண்டும் தமிழக முதல்வராக வருவார் என்றார்.
கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்எல்ஏ பேசியதாவது, உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழ் சமுதாயத்தின் நீதி வடிவாய் திகழ்ந்து வரும் ஜெயலலிதாவை அரசியல் சூழ்ச்சியால் மாபெரும் சதிவலையால் அநீதியை வழங்கிய சதிகார கும்பலுக்கு எதிராக இன்றைக்கு தமிழக மக்கள் கொதித்தெழுந்து அறவழியில் தங்களை போராட்டத்தில் அர்ப்பணித்துள்ளனர். எதிரிகளை தோற்கடித்து பல்வேறு வெற்றிகளை கண்ட ஜெயலலிதாவை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அநீதி இழைத்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தமிழக மக்களின் பிரார்த்தனைகள் அறவழி போராட்டங்கள் போன்ற அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற்று இனி தமிழ்நாடு அம்மா நாடுதான் என்பதை மக்கள் நிரூபித்து காட்டுவார்கள். அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வருவார் என்றார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ பேசியதாவது, மனித நேயம் இல்லாமல் மக்கள் சக்திக்கு விரோதமாக மாபெரும் அநீதி ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கமாகும். சிறந்த மக்கள் ஆட்சியை நடத்தி வரும் ஜெயலலிதாவின் அபரிதமான மக்கள் செல்வாக்கை கண்டு பொறுக்க முடியாத சில அரசியல் கட்சிகளும், மத வாத சக்திகளும் கூடி நிகழ்த்தப்பட்ட இந்த சதியை விரைவில் ஜெயலலிதா உடைத்து மீண்டும் வருவார். அதற்காக தமிழ்சமுதாய மக்கள் அனைவரும் அறவழி போராட்டத்தில் தங்களைஇணைத்து கொள்ள வேண்டும். நீதியின் வடிவமாய் வாழும் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டு பெண்குலமே கண்ணீர் வடித்து கதறி வருகிறது. இது போன்ற அறப்போராட்டங்களினால் தடைகளை தகர்த்தெறிந்து மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா வருவார் என்றார்.
மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது, இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 நாடுகளில் வாழும் தமிழ் சமுதாயம் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. 1972ல் இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் காணாத பல்வேறு வெற்றிகளை கண்டு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஜெயலலிதா திகழ்கிறார். மகா பாரதத்தில் உச்சக்கட்ட போரின் போது கிருஷ்ணபரமாத்மா விஷ்வரூபம் எடுத்து அர்ச்சுணனுக்கு காண்பித்தார். அதைப்போல அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தனது விஸ்வரூபத்தை ஜெயலலிதா விரைவில் காட்டுவார்.ராமன் இருக்கும் இடம் அயோத்தியை போல ஜெயலலிதா இருக்கும் இடம்தான் எங்களுக்கு சொர்க்கமாகும். கருணாநிதியின் குடும்பத்தினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு பணத்தை கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். அதுபற்றி சுப்பிரமணியசாமி வழக்கு போட்டாரா? கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத செயல்களுக்காக சுப்பிரமணியசாமி வழக்குப்போட்டாரா? இதே சுப்பிரமணியசாமி டெல்லியில் இருந்து பலவேறு உலக நாடுகளுக்கு பறந்து, பறந்து செல்கிறாரே அதற்கு உண்டான கணக்கை அவர் காண்பித்தாரா? மதுரையில் குடியிருக்கும் சுப்பிரமணியசாமியின் வீடு கட்டப்பஞ்சாயத்திதின் மூலம் அடித்து வாங்கப்பட்ட வீடாகும். 1998ம் ஆண்டு இதே மதுரையில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினாரே அவர் ஜெயலலிதாவின் தயவில் தானே எம்பியாக முடிந்தது. சுப்பிரமணியசாமி உயிருக்கு ஆபத்து வந்த போது காப்பாற்றப்பட்ட இடம் மதுரை என்பதை அவர் மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா சென்ற வாகனத்தின் மீது மோதி அவரது உயிரை குறிவைத்து ஏற்படுத்திய விபத்தை சம்பந்தப்பட்ட டிரைவர் மீது கருணாநிதி தன் ஆட்சியின் போது எந்த வழக்கும் போடவில்லை. தற்போது ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி நிரந்தரமானதல்ல. அவர் சுயம்புவாக தானாக எழுந்து வருவார். பெங்களூர் சிறையில் அவர் இருந்தாலும் தமிழக மக்களை நித்தம் நித்தம் நினைத்து வருகிறார். தமிழக மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வந்த அவரது பொற்கால ஆட்சி மீண்டும் தொடரும். ஆழிபேரலை தமிழகத்திற்கு வந்த போது தமிழகத்தின் பல்வேறுப குதகள் பாதிக்கப்பட்டன. ஆனால் திருச்செந்தூரில் மட்டும் கடல் உள் வாங்கியது. ஏனென்றால் அங்கு முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். அதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு பன்னீர் இலைகளால் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதுதான் திருச்செந்தூரை காப்பாற்றியது. அதைப்போல நமக்கு இரட்டை இலை இருக்கிறது எனவே எந்த அலை வந்தாலும் இரட்டை இலை இருக்கும் போது நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது.
தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலில் அதிமுகவை ஒதுக்கிவிட்டு எவரும் ஆட்சி நடத்த முடியாது. இன்று இழைக்கப்பட்டுள்ள அநீதி நிரந்தரமானதல்ல. அதிமுகவை ஜெயலலிதா இருக்கும் வரை எந்த கொம்பனாலும் அசைத்து விடமுடியாது. இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் நிரந்தமானவை அல்ல. இந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வருவார். அதுவரை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கழக தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் அறவழிபோராட்டங்களில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி,தலைமை கழக பேச்சாளர்கள் அமுதா, நெத்தியடி நாகையன், சமத்துவ மக்கள் கட்சி மாநில பொருளாளர் சுநதரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் முன்னாள்எம்பி எஸ்.முத்துமணி, மாநில எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளர் எம்.எஸ்.பாண்டியன், துணை மேயர் கு.திரவியம், மாவட்ட நிர்வாகிகள் சி.தங்கம், ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் பெ.சாலைமுத்து, தளபதி ஆர்.மாரியப்பன், எம்.ஜெயபால், எம்.என்.முருகன், பி.எஸ்.கண்ணன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பூமிபாலகன், ஏ.கே.முத்திருளாண்டி, அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன், கா.டேவிட் அண்ணாதுரை, ஷ.ராஜலிங்கம், பெ.இந்திராணி, தமிழ்செல்வன், ஏ.ராஜீவ்காந்தி, டி.விநோத்குமார், புதூர் சுந்தரா, தொகுதி கழக செயலாளர்கள் கிரம்மர் சுரேஷ், எஸ்.முருகேசன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆர்.ராமச்சந்திரன்,கோவிந்தன், ஏ.பி.பாலசுப்பிரமணியன், எம்.ரமேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் அமாவாசை, கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர்,கேசவபாண்டியம்மாள், கார்னர் பாஸ்கரன் மற்றும் ஜி.என்.அன்புசெழியன், வி.வி.ஆர் ராஜ்சத்தியன், கணேசன், யுகா ராஜா, வல்லரசு, லட்சுமி, தத்தனேரி பன்னீர்செல்வம், மூமுக நிர்வாகிகள் ஆறுமுக நாட்டார், சண்முகசுந்தரம், சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர், சிவக்குமார், திருப்புவனம் பாண்டி, பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் சி.முத்துராமலிங்கம், எம்.டி.ராஜூ, கணேசன், மோகன், அழகுமலை, செல்வகுமார், மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் பகவதி, மேற்குபகுதி இளைஞர் அணி பொருளாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு பாசுபாய், எஸ்.சிக்கந்தர்பாட்சா, வட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், பாக செயலாளர் பாஸ்கரன், சூப்பர் மார்க்கெட் முத்துச்சாமி, வட்ட செயலாளர்கள் புதூர் கே.எம்.கண்ணன், பஜார் துரைப்பாண்டி,சக்திவினாயகர் பாண்டியன், கே.வி.கே.கண்ணன், எஸ்.போஸ், கந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.