முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகத் சிங்கின் இளைய சகோதரி காலமானார்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டீகர், செப்.30 - சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்க்கின் இளைய சகோதரி பிரகாஷ் கவுர், கனாடாவில் காலமானார். அவருக்கு வயது 96. பகத் சிங் தலைமுறையில் இவரே கடைசி நபர் ஆவார்.

பிரகாஷ் கவுர் மறைந்த செய்தியை, பஞ்சாபின் ஹோஷியார்பூரில் வசிக்கும் அவரது மருமன் ஹர்பஜன் திங் தத் தெரிவித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான வீரராகப் போற்றப்படுபவர் பகத் சிங். லாகூரில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றதற்காக 1931-ஆம் ஆண்டு பகத் சிங்கிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, பகத் சிங் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்