எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு மற்றும் அனுதாப அலை பெருகி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஜெயலலிதா மீதான வழக்கில் கடந்த 27ம் தேதியன்று கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட செய்தி அறிந்ததும் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. தமிழகம் சோகக் கடலில் மூழ்கியது. தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். என்றைக்கும் எங்களுக்கு அம்மாதான் முதல்வர் என்று கூறிய அவர்கள் அதற்கு காரணம் அம்மா ஒருவர்தான் தமிழக மக்களுக்கு நல்லது செய்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தி.மு.க. தலைவர் கருணாநிதியின், கொடும்பாவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வணிகர்கள், கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கடையடைப்பு போராட்டம் கடந்த 3 நாட்களாகவே நீடிக்கிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற முக்கிய நகரங்களில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே கட்சியினரும், பொதுமக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். இது ஒன்றும் இறுதி தீர்ப்பல்ல என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஜெயலலிதா தடைகளை தாண்டி அவற்றை தகர்த்தெறிந்து மீண்டு வருவார் என்று தோழமை கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபல பத்திரிகையாளர் சோ கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை பெருகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தையே பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.. 1.76 லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது ஜெயலலிதாவுக்கு இப்படி தீர்ப்பு வழங்குவதா என்று ஒரு சாதாரண குடிமகனும் புலம்புகிறார். அது மட்டுமல்ல, வரைமுறையே இல்லாமல் ரூ. 100 கோடி அபராதம் விதிப்பதா என்றெல்லாம் பொதுமக்களே புலம்புகிறார்கள். இந்த தீர்ப்பு குறித்து பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறிய போது, இந்த தீர்ப்பை கூறிய நீதிபதி குன்ஹா, மிகப் பெரிய தவறு இழைத்து விட்டார். சட்டத்தின் கோட்பாடுகளை அவர் மதிக்கவில்லை என்று கொதித்துப் போய் கூறியுள்ளார். சட்டத்தின் எல்லையை தாண்டி அவர் தீர்ப்பு கூறி இருப்பதாகவும் ஜெத்மலானி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் பங்கேற்று நாங்கள் என்றென்றும் ஜெயலலிதாவின் பக்கமே என்று கூறியுள்ளனர். காரணம், ஜெயலலிதா கலையுலகிற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் சேவை செய்தவர். அது மட்டுமல்ல, திரையுலகிற்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியவர் ஜெயலலிதா. திருட்டு விசிடி ஓழிப்பில் முக்கிய பங்காற்றியவரும் அவரே.
அதனால்தான் அவருக்கு அனைத்து துறையை சேர்ந்தவர்களும் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள். திரையுலகிற்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்குமே பல நன்மைகளை செய்தவர் ஜெயலலிதா. கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் மற்றும் சீருடைகள் என அனைத்து சலுகைகளையும் வழங்கி கல்வி புரட்சிக்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதே போல் தாய்மார்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் என அனைத்தையும் வழங்கி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் மக்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, மக்களின் நன்மை கருதி அவர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது. அன்னதான திட்டம் முதல் அனைத்து திட்டங்களும் அவரது நல்ல உள்ளத்தை பறைசாற்றுகின்றன.
தாகம் தீர்ப்பது புண்ணியம் என்பார்கள். அதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா அம்மா குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இத்திட்டத்தின் படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 10க்கு வழங்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் இதை வாங்கி பலனடைகிறார்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். அந்த உப்பையும் குறைந்த விலையில் வழங்கியவர் ஜெயலலிதா.
அதன் பிறகு அம்மா மருந்தகங்களை தொடங்கி வைத்த ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்த ஒப்பற்ற திட்டம்தான் சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் திட்டம். இந்த திட்டத்தின் படி ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 190 க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு உன்னத திட்டம் என்றால் அதுதான் அம்மா உணவக திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் வயிறார சாப்பிட்டு வருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்து சாதங்களும் வழங்கப்படுகின்றன. இப்படி மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவக திட்டத்திற்கு வெளி மாநிலங்களிலும் வரவேற்பு பெருகி வருகிறது. இந்த திட்டத்தை ஆந்திர மாநிலமும் பின்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி நாள்தோறும் மக்களை பற்றியே சிந்தித்து அவர்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமின்றி அவற்றை நிறைவேற்றியும் காட்டியவர் ஜெயலலிதா.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்காக நான், மக்களால் நான் என்று குறிப்பிட்டதை இன்றளவும் மறக்க இயலாது. இப்படி பட்டியலிட முடியாத திட்டங்களை செயல்படுத்திய ஒரே காரணத்தால்தான் அவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு மற்றும் அனுதாப அலை பெருகியுள்ளது என்றால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள