முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போலீஸ்காரர் தீக்குளிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.1 - தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் வேல்முருகன் (42). அலுவலக வேலை தொடர்பாக சென்னை வந்தார். நேற்று

காலை போலீஸ் உடையுடன் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வேல்முருகன் சென்றார்.காலை 11.30 மணியளவில் டி.ஜி.பி. பிரதான வாயில் முன்பு நின்று அவர், கையில் கொண்டுசென்ற மண்எண்ணெய் பாட்டிலை திறந்து உடலில் ஊற்றினார்.

‘புரட்சிதலைவி அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டபடி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் போலீஸ்காரர் வேல்முருகன் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.

இதையடுத்து, டி.ஜி.அலுவலக போலீசார் விரைந்து வந்து வேல்முருகனை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மைலாப்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

விளையாட்டுத்துறையில் ஆர்வமிக்க வேல்முருகன், போலீஸ் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் பரிசுகளும் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் ஜெயலலிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். எனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago