முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசின் ஆலோசனைப்படி கவர்னர் செயல்பட வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, அக்.01 - ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசின் ஆலோசனையின்படி கவர்னர் செயல்பட வேண்டும். இதை தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை ‘கொலீ ஜியம்’ என்று அழைக்கப்படும் நீதிபதிகள் அடங்கிய குழு நியமித்து வந்தது. இதை மாற்றி அரசுக்கும் பங்கு இருக்கும் வகையில் தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவும், அது தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டன.

இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில், "நீதித்துறை நியமன ஆணைய மசோதா தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்தத்துக்கு மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான், அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், "மசோதாவின் பிரிவு 6(7)-ல் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியையும், நீதிபதிகளையும் நியமிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநர், முதல்வரின் கருத்துகளை கேட்ட பின்பே ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, மாநில அரசின் ஆலோசனையின் படிதான் நீதிபதியின் பெயரை கவர்னர் பரிந்துரைக்க வேண்டும் என்று மாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்