முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் கண்ணியமாக வாழ ஓய்வூதிய திட்டம்: அமைச்சர்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டிகர், அக் 2:

மக்கள் கண்ணியமாக வாழ்க்கை நடத்துவதற்காக தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மாதம் ரூ. ஆயிரம் ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குவதாக மத்திய மக்கள் குறைதீர்வு, ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

சண்டீகரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அவர் கூறியதாவது,

நாட்டில் ஒவ்வொருவரும் சமூகத்தில் கண்ணியமாக வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தை எட்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஒருபுறம் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். மறுபுறம் முதியவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து வருகிறது என்ற முரண்பட்ட நிலை நாட்டில் காணப்படுகிறது. 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதை மனதில் கொண்டு அரசு கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்