முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா., - அரியானாவில் 4ம் தேதி முதல் பிரதமர் பிரச்சாரம்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 2:

மகராஷ்டிரம், அரியானா ஆகிய மாநிலங்களில் வரும் 1 5ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அன்றைய தினம் அரியானா மாநிலத்தில் ஒரு இடத்திலும், மகராஷ்டிர மாநிலத்தில் மும்பை, கோலாப்பூர், பீட் ஆகிய 3 இடங்களிலும் பிரச்சார கூட்டங்களில் மோடி கலந்து கொள்கிறார். மகராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 24 பிரச்சார கூட்டங்களிலும், அரியானா மாநிலத்தில் 10 பிரச்சார கூ ட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார்.

மேலும் பாஜக தலைவர் அமீத்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் மகராஷ்டிர மாநிலத்தில் மட்டும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மகராஷ்டிர மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும், அரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்