எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.அக்.2 - மக்கள்முதல்வர் ஜெயலலிதா தன்னை நிரபராதி என நிரூபித்து ‘பீனிக்ஸ்’ பறவை போல் எழுந்து வருவார் என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசினார்.
சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் நேற்று முன்தினம்பிற்பகல் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேயர் சைதை துரைசாமி, "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்" என்ற திருக்குறளை வாசித்து, துன்பமானது இடைவிடாது மேலும் மேலும் வந்தாலும் கலங்காமல் இருப்பவனை அடைந்த துன்பமே துன்பப்பட்டு ஒழியும், அதே போன்று ஜெயலலிதாவுக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் துன்பப்பட்டு ஒழியும் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, மேயர் சைதை துரைசாமி மேலும் பேசியதாவது:-
சென்னை மாநகராட்சி மன்றத்தின் இன்றைய கூட்டம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. பொல்லாங்கு செய்யும் புன்மை மனத்தவரின் சதிச்செயலால் இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழ்நாடும் குமுறிக் கொண்டிருக்கிறது.
தனக்கென வாழா தகைமையாளர், தனக்கிணை இல்லா தலைமையாளர், நூறாயிரம் ஆண்டு ஏங்கித் தவம் கிடந்து வாராது வந்த மாமணி மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி அன்று வழங்கப்பட்ட நீதி மன்ற கோட்பாடுகளுக்கும் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலுக்கும் எதிரான தீர்ப்பின் காரணமாக எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
நேர்மையற்ற வகையில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர் ஜெயலலிதா. தனக்குப் பின்னே தன் குடும்பம் தன் சொந்தம் என்று சொத்து சேர்க்க வேண்டிய தேவையில்லாதவர் ஜெயலலிதா. படுபாவிகள் சூழ்ச்சி செய்து ஜெயலலிதாவை இப்படி கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்களே என்று பொதுமக்கள் மனம் வெந்து துடிக்கின்றார்கள். இந்த வழக்குக்கு காரணமான சதிகாரர்களையும் இதற்கு துணையாக இருந்த ஏனையோரையும் பார்த்து தமிழ் இனமே சாபம் விட்டுக் கொண்டிருக்கிறது.
1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதன் முறையாக தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பொய்யுரைத்து, புனைசுருட்டுக்களை அள்ளி வீசி, பொதுமக்களை ஏமாற்றி 1996-ம் ஆண்டில் ஆட்சி பீடம் ஏறிய கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் செய்ததெல்லாம், ஜெயலலிதா மீது திட்டமிட்டே பொய் வழக்குகள் போட்டதுதான்.
ஒன்றல்ல, இரண்டல்ல! விதம் விதமாக ஜோடித்து மொத்தம் 12 பொய் வழக்குகளைப் போட்டார் கருணாநிதி. இந்த வழக்குகள் எல்லாம். கருணாநிதியால் வடிவமைக்கப்பட்டவை, சூழ்ச்சி வலையில் பின்னப்பட்டவை.
திட்டமிட்டு ஜோடித்து போடப்பட்ட பொய் வழக்குகள் என்பதை, மக்கள் உணர்ந்த காரணத்தால் தான், 2001 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும், அதன் பின்னர் நடைபெற்ற ஐந்து உள்ளாட்சி மன்ற தேர்தல்களிலும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடே வியக்கும் வண்ணம் ஜெயலலிதாவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து நிரூபித்தனர்.
2001-ம் ஆண்டில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதும் அன்றைய தமிழ் மாநில காங்கிரசின் தலைவராகவும், சட்ட மன்ற எதிர் கட்சித் தலைவராகவும் இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் சட்டமன்றத்திலே கூறும்போது, "மக்கள் மன்றம் தான் மகத்தான மன்றம் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லாத காரணத்தால் தான், மக்கள் மன்றம் உங்களுக்கு மாபெரும் வெற்றியை அள்ளித் தந்திருக்கிறது. அதனால், அந்த பொய் வழக்குகளை ரத்து செய்திட சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்" என்று முன் மொழிந்தார்.
ஆனால் ஜெயலலிதாவோ, வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன், வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்தார். மேற்கூறிய உண்மைகள் அனைத்தும் சட்ட மன்ற நடவடிக்கை பதிவேடுகளில் பதிவாகி உள்ள சரித்திர சான்றுகள் ஆகும்.
அதே போல நிரபராதி என நிரூபித்து நியாயத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் ஜெயலலிதா வைத்திருந்த மாண்பை வெளிப்படுத்தி கருணாநிதியால் போடப்பட்ட 10 பொய் வழக்குகளில் வெற்றி பெற்று அந்த பொய் வழக்குகளை முறியடித்தார்.
ஜெயலலிதா எந்த வழக்கைக் கண்டும் இதுவரை அஞ்சியதில்லை. சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கும் துணிவு படைத்த ஜெயலலிதா, கருணாநிதி ஜோடித்த பொய் வழக்குகளை நீதி மன்றங்களில், நேருக்கு நேர், தலை நிமிர்ந்து சந்தித்து அந்த வழக்குகள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார்.
அதே போல, இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வழக்கையும் நீதிமன்றத்தில் வழக்காடி, வாதாடி விரைவில் நீதியை நிலை நிறுத்துவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஜெயலலிதாவின் கால் சுண்டு விரலில் ஒரு சிறு முள் தைத்தாலும், தமிழ்நாடே கொந்தளிக்கும் குமுறி எழும்.
ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்து தண்டனை பெற்று தந்தவர்களை, அதை ஆதரித்து பேசுகிறவர்களை, ஏழை சிந்தும் கண்ணீரை ஏளனம் செய்வோரை, எதிர் வரும் தேர்தல்களில் அரசியலை விட்டு ஓட்டு மொத்தமாய் அப்புறப்படுத்துவார்கள், ஜெயலலிதாவுக்கு சதிச்செயலால் கிடைத்த தண்டனையை சரி என்று யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மக்கள் சரியான தண்டனை வழங்குவார்கள். இது சாபம் அல்ல, சத்தியம்! இதுவே நாளைய சரித்திரம்!
ஏழரை கோடி தமிழ் மக்களின் இதயத்தில் நிறைந்த தலைவரை, உலக தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து இருக்கும் ஒப்பற்ற தலைவரை, சதியாட்டம் போட்டு, சாய்த்து விட்டதாக குத்தாட்டம் போடும் வல்லூறுகளுக்கு மரண அடியை, மக்கள் சக்தியை திரட்டி கொடுப்பதற்கு ஜெயலலிதா ஆயத்தம் ஆகிவிட்டார்.
பூட்டிய சிறைக் கதவை தகர்த்து புடம் போட்ட தங்கமாய், தன்னை நிரபராதி என நிரூபித்து, ‘பீனிக்ஸ்’ பறவையை போல் எழுந்து வருவார்.
இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.