முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கங்கள்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 2– நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முதலமைச்சரின் ஆணைப்படி, 1) டாக்டர் k. பாலகிருஷ்ணன், கூடுதல் காவல் துணை ஆணையர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாநகரம், 2) . கி. சண்முகம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காஞ்சிபுரம் மாவட்டம், 3) திருமதி. . பத்மாவதி, காவல் ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, திருச்சி மண்டலம், திருச்சி மற்றும் 4) . மு. பாபு, காவல் உதவி ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருதுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன விருது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 2015-ஆம ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர்களுக்கு பதக்கங்களுடன், பரிசுத்தொகையாக தலா ரூ.20,000/-மும் வழங்கப்படும்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்