முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்த ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என பாடகர் ஜேசுதாஸ் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியபோது ஜேசுதாஸ் பேசியதாவது,

"பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது. ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை" என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் இளம் பெண்கள். சுத்தமான கேரளம், சுந்தர கேரளம் என்ற திட்டத்தை துவக்கி வைத்தபோது ஜேசுதாஸ் இப்படிப் பேசியுள்ளார்.

ஜேசுதாஸின் கருத்துக்குகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெண்கள் காங்கிரஸார், திருவனந்தபுரத்தில் கண்டனப் பேரணியும் நடத்தியுள்ளனர். பெண்களுக்கு எதிரான அவரது கருத்தை திரும்பப்பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்