முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா விடுதலையாக மீனாட்சி அம்மன் கோயிலில் யாகம்

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, அக் 6 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டியும், அவர் பூரண உடல்நலத்துடன் இருக்க வேண்டியும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 70 சிவாச்சார்யார்கள் பங்கேற்று நடத்தும் மகா யாகம் இன்று நடக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டியும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டியும், பூரண நலத்துடன் இருக்க வேண்டியும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மகா யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் 70 சிவாச்சார்யார்கள் கலந்து கொண்டு மந்திரங்களை ஓதுகிறார்கள். இந்த யாகம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. யாகத்தில் சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் நடத்தப்படுகிறது.

முன்னதாக 70 சிவாச்சார்யார்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு வேள்விக்கான யாகத்தை வளர்த்து 7 மணிக்கு சிறப்பு பூஜையையும் அர்ச்சனையையும் தொடங்குகிறார்கள். இதில் கலந்து கொள்ளும் சிவாச்சார்யார்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிறப்பு பூஜை நடத்துகிறார்கள். இந்த சிறப்பு யாகத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ, மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏக்கள் ஏ.கே. போஸ், எம். முத்துராமலிங்கம், கே. தமிழரசன், மேலூர் ஆர். சாமி, எம்.வி. கருப்பையா, துணை மேயர் கு. திரவியம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம். எஸ். பாண்டியன், மண்டல தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ஜெயவேல், கே. ராஜபாண்டியன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம்(தாம்புராஸ்) சார்பில் ஜெயலலிதா விடுதலையாக வேண்டியும், மழை பொழிய வேண்டியும் சுதர்சன ஹோமம் மற்றும் வருண ஜபம், வருண சுபிக்தம், வருண மூல மந்திரம், நவக்கிரஹ ஹோமம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி. ஜெகநாதன், மாநில துணை தலைவர் கணபதி நரசிம்மன், கமிட்டி சேர்மன் எஸ். சங்கர், மாவட்ட தலைவர் ஆர். ராஜூ, மாநில,மாவட்ட, கிளை நிர்வாகிகள், மாநில ஆலோசகர் டெல்லிகணேஷ், மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகுமார், எஸ். மோகன், ஸத்குரு சாமஜத்தின் செயலாளர் ஸ்ரீராஜாராமன், மகாசங்கல்பத்தில் ஸ்ரீசங்கர், அட்வகேட் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த ஹோமத்தில் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு வழிபட்டார்.

மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அவர் விடுதலையாக வேண்டி மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள அரசமரம் விநாயகர் கோயிலில் மாவட்ட பேரவை செயலாளர் கா. டேவிட்அண்ணாதுரை தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நரிமேடு சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட பேரவை தலைவர் கலைசெல்வன், தெற்கு பகுதி கழக செயலாளர் ஏ.கே. முத்து இருளாண்டி, வடக்கு பகுதி கழக செயலாளர் கே. ஜெயவேல், பேரவை பகுதி செயலாளர்கள் இ.பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர். முனியாண்டி, சப்னா தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயிலிலும், அழகர் கோவிலிலும் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் கே. தமிழரசன் எம்எல்ஏ தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒத்தக்கடை சிஎஸ்ஐ தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அச்சம்பட்டி பெருமாள் கோயிலில் புறநகர் மாவட்ட பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மாவட்ட பேரவை தலைவர் பிரேம் ஆனந்த், சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர் பாண்டி, துணை செயலாளர் சுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்