முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவம் முடிந்தும் திருப்பதியில் கூட்டம் குறையவில்லை

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக் 7:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து கடந்த 4ம் தேதி வரை 9 நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. பிரம்மோற்சவ விழா முடிந்ததும் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.

தசரா மற்றும் பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு கடந்த 3ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் மதியம் வரை தரிசன அனுமதி சீட்டு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் நடைபாதைகள் வழியாக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருமலைக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

ஏற்கனவே திருமலையில் காத்திருந்த இலவச தரிசன பக்தர்களும், நடைபாதைகளில் நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களும் சேர்ந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பின. இலவச தரிசன கவுண்டர்களில் 3 கி.மீ தூரமும், திவ்ய தரிசன கவுண்டர்களில் 2 கி.மீ தூரமும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 30 மணி நேரமும், திவ்ய தரிசனத்துக்கு 20 மணி நேரமும் ஆனது. வரிசையில் காத்திருந்த பக்தர்கள் முண்டியடித்து தரிசனத்துக்கு செல்ல முயன்றனர். பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுடன் வந்த ஏராளமான பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். அதில் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் திருமலை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பாதுகாப்பு படை ஊழியர்கள் விரைந்து சென்று மேற்கண்ட இரு இடங்களில் தரிசன கவுண்டர்களில் கயிறு கட்டி பக்தர்களை ஒழுங்குபடுத்தி தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன வரிசைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு  பக்தர்கள் காயம் அடைந்த தகவலை கேள்விப்பட்ட ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். கூட்ட  நெரிசலால் பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் செய்த ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago