முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமிஷனர் அலுவலகம் முன்பு நடிகை மாயா தீக்குளிக்க முயற்சி

புதன்கிழமை, 8 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக். 9 - திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை மாயா. நேற்று மதியம் 12.30 மணியளவில் மாயா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அ.தி.மு.க. பார்டர் போட்ட சேலை அணிந்திருந்தார். அலுவலகத்தின் நுழைவு வாசலில் அவரை தடுத்து நிறுத்தி பெண் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் ஒரு பாட்டிலில் மண்எண்ணை இருந்தது. அதை கைப்பற்ற போலீசார் முயற்சி செய்தனர். அப்போது திடீரென்று பாட்டிலில் இருந்த மண் எண்ணையை உடலில் ஊற்ற முயற்சி செய்த அவர் ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க. அம்மாவை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டார். திடீரென்று நடுரோட்டில் படுத்துக் கொண்டார். உடனே வேப்பேரி போலீசார் வந்து அவரை அழைத்து சென்றனர்.

மாயாவுடன் அவரது மகள் குணப்பிரியாவும் வந்து இருந்தார். இச்சம்பவத்தால் கமிஷனர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்