முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சி.பி.ஐ-க்கு கேள்வி

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, அக்.11 -ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்பு விரும்புகிறதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அண்மையில் சிபிஐ தனது குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்த வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இந்த அமைப்பு நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே ஏர்செல்-மேக்சிஸ் முறைகேட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும் பொறுப்பு என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்பு விரும்புகிறதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்