முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களுடன் மோதல்: நடிகை ரோஜாவை தாக்க முயற்சி

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, அக் 12 - நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். நகரி தொகுதிக்குட்பட்ட மேலப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். மேடையில் நகரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணநாயுடு படத்துடன் கூடிய பேனர்களை தெலுங்கு தேசம் கட்சியினர் வைத்து இருந்தனர். அதோடு அவரது கையால் நலத்திட்ட உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஜா கூட்டத்துக்கு வந்தார். அவர் பேசும் போது, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி கொண்டு வந்த திட்டங்களை நினைவுபடுத்தினார். ரோஜாவின் இந்த பேச்சுக்கு தெலுங்குதேச தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போதைய முதல்வரின் தி்டடங்களை மட்டுமே பேச வேண்டும் என கூறினர். அவர்களுடன் ரோஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அடிதடி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஒரு கூட்டத்தில் நடிகை ரோஜாவை தாக்க தெலுங்கு தேச தொண்டர்கள் தடியுடன் பாய்ந்து வந்தனர். உடனே போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். அதன் பிறகு அமைதியாக கூட்டம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்