முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளீன் இந்தியா: மோடியை சந்தித்து நன்றி கூறிய சச்சின்

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக்.18 - இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது அவர் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுத்ததற்காகவும் அந்த திட்டத்தில் பங்கேற்ற தன்னை பாராட்டியதற்காகவும் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவையும் சுத்தப்படுத்தினார்.

மேலும் சச்சின் உள்பட சில பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட சச்சின் தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய குப்பைகளை சுத்தம் செய்தார். இதில் சச்சின் இணைந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கூறுகையில், சிறந்த பணியை சச்சின் செய்து உள்ளார். சச்சினின் இச்செயல் தூய்மை திட்டத்துக்கு பெரும் ஆதரவை பெற்று தரும் என்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் தானும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப் போவதாக கூறிய சச்சின் டெண்டுல்கர், அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மட்டுமல்லாது, பள்ளிகள், கல்லூரிகளில் விளையாட்டுத்துறையை முன்னேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 ஆம் தேதி சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.கட்சி பாகுபாடு இன்றி ஒவொரு எம்.பியும் 3 கிராமங்களை மேம்படுத்தினால் 2019ம் ஆண்டிற்குள் 2500 கிராமங்கள் மேம்பாடு அடைந்து விடும். இந்த திட்டத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களும் கிராமப்புறங்களில் மேம்படுத்த முயற்சிக்கலாம் என தெரிவித்தார். இப்போது இந்த திட்டத்தின் கீழ் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்